சர்வதேச பட்டினி தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூத்த குடிமக்களுக்கு காலை உணவு இன்று வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் நிலையை எடுத்துரைக்கவும் வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான நிலையான திட்டங்களை வகுப்பதற்காகவும்.

சர்வதேச அளவில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
வேதாரண்யம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்.
வேதாரண்யம் நகர செயலாளர் தர்மா ராஜராஜேஷ்குமார் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
