சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் கோலாகல பக்தி பரவச கொண்டாட்டம் தைப்பூசம்!

2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழா சிங்கப்பூரில் பிப்ரவரி 11 ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவது போல அதே உற்சாகத்துடன் சிங்கப்பூரில் கொண்டாட்டப்படுகிறது .


குறிப்பாக பக்தர்கள் பாத ஊர்வலமாக முருகன் கோவிலுக்கு செல்லுவர்.அப்படி செல்லும்போது அலகு குத்தியும் காவடிகள் எடுத்தும் அவர்கள் செல்கின்றனர் .
பால் காவடி, மயில் காவடி, வண்ண விளக்குகளாக அலங்கரிக்கப்பட்ட காவடிகள் என சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா அன்று காவடிகள் அணிவகுக்கும்


தைப்பூச திருவிழாவிற்கு முதல் நாள் இரவு பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் காவடிகள் எடுத்து முருகனுக்கு தங்களது நேர்த்தி கடமையை செலுத்துவார்கள்.

தைப்பூச திருநாளான பிப்ரவரி 11-ம் தேதியும் ஆயிரக்கணக்கான காவடிகள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


தைப்பூச திருவிழா சிங்கப்பூர் மலேசியா கனடா இலங்கை லண்டன் போன்ற இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய நாடுகளில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


நேர்த்திக் கடனை செலுத்தக்கூடிய பக்தர்கள் தங்களுக்கான பால்குடம் மற்றும் காவடிகளை ஏந்துவதற்கு முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 10 ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு துவங்குகிறது.

பக்தர்கள் பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 11 மணிக்குள் தங்களுக்கான நேர்த்தி கடனை செலுத்தி விடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிரங்கூன் சாலையில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தில் காவடிகள் புறப்பட்டு பக்தர்கள் பாத ஊர்வலமாக டேங்க் ரோட்டில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்கு செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பார்க்கவும்.

Thaipusam 2025

Related Posts