சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு.

சிங்கப்பூரில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சிங்கப்பூர் ஸ்ரீரங்கம் சாலையில் உள்ள அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆலயம். மற்றும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன இந்த சிறப்பு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் நண்பர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முக்கியமாக சிங்கப்பூரில் நடைபெற்ற வான வேடிக்கை சுற்றுலா பயணிகளை மட்டும் அல்லாது சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து பணிபுரியும் தொழிலாளர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts