சிங்கப்பூரில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளன.
சிங்கப்பூரில் சீன புத்தாண்டுக்கான விடுமுறை ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக சீன புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் ஆண்டாக அழைக்கப்படுகிறது அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கு சீன புத்தாண்டு பாம்புகளின் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூரின் சீனா டவுன் பகுதியில் தற்போது சிக்னர்கள் பெருமளவில் குவிந்து தங்கள் இல்லங்களுக்கு தேவையான சீன புத்தாண்டு அலங்கார பொருட்களை வாங்கி வருகின்றனர்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 18 ஜனவரி 2025 அன்று நடைபெற்றன. சைனாடவுன் பகுதியில் வசிப்பவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இணைந்தனர்.
டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் அமைச்சரும், உள்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான திருமதி ஜோசஃபின் தியோ இந்த விழாவில் கலந்து கொண்டார். பாரம்பரிய சைவ சீன உணவும் கோயில் தன்னார்வலர்களால் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது