பிரபல யூட்டிபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது .
Youtubeல் உணவு சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்குபவர் பிரபல யூட்யூபர் இர்பான் இவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த ஆண்டு ஹசிபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் ஹசிபா தற்போது கர்ப்பமாக உள்ளார் .
நேற்றையதினம் இர்பான் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் துபாய்க்கு மனைவியை அழைத்துச் சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு அதனை தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் மாயா பங்கேற்று இருந்தார் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வதும் அதனை அறிவிப்பதும் சட்டப்படி குற்றமாகும் மறைமுகமாக இதனை செய்யும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இர்பான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறை காவல்துறையிடம் பரிந்துரை செய்துள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது .