இந்திய செய்திகள்

சிங்கப்பூர் டூ தமிழ்நாடு விமான பயணிகளின் கவனத்திற்கு -புயல் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நவம்பர் 30 பெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ளதால் விமான பயணிகள் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகளுக்கு விமானம் மற்றும் சாலை போக்குவரத்தில் பயணம் திட்டமிட்டு இருந்தால் பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் .

தமிழ்நாடு Fengal  புயல் எச்சரிக்கை

Fengal   (நவம் 30) பிற்பகல் 1மணி அளவில் கரையை கடக்க துவங்கும்.

==> சென்னை – புதுச்சேரி இடையே மரக்காணம் அருகே புயலாகவே கரையை கடக்கும்.

==> இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு தரைக்காற்றுடன் இன்று மழை பதிவாகும்.

==> குறிப்பாக சென்னை, திருவள்ளூர், #காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நவம்பர் 29 இரவு 7 மணி முதல் நவம்பர் 30 பிற்பகல் 2 மணிக்குள் அதித கனமழை பதிவாகும். சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

==> சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட மக்கள்  நவம்பர் 29,  இரவு 10 மணி  முதல் நவவம்பர் 30 இரவு 10 மணி வரை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம், பாதுக்காப்பாக இருங்கள். அச்சப்பட தேவையில்லை.

மேல் குறிப்பிட்டுள்ள பகுதிகள் மற்றும் மாவட்டங்களுக்கு விமான பயணம் மற்றும் சாலை வழி பயணம் திட்டமிட்டு இருப்பவர்கள்  தங்களின் பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்.

Related Posts