இந்திய செய்திகள்

சென்னையில் விமானம் ரத்து -வருகை புறப்பாடு

தமிழ்நாட்டில் தற்போது பெஞ்சல் புயல் இன்று மாலை முதல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவனங்களின் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நவம்பர் 30ஆம் தேதி இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடந்த பிறகு வானிலை சீரான உடன் போக்குவரத்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பெஞ்சல் புயல் இன்று பிற்பகல் முதல் இரவு  அதிகாலை வரை கரை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் பாண்டிச்சேரி முதல் சென்னை வரை உள்ள பகுதிகளில் தற்போது போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. மேலும் புயல் கரையை கடக்கும் மாவட்டங்களில் பயணம் திட்டமிட்டு இருக்கும் பயணிகள் அதனை மாற்று தேதியில் மாற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக, இண்டிகோ விமான சேவை இன்று (நவ.30) முழுவதுமாக ரத்து.

வருகை, புறப்பாடு என அனைத்து சேவைகளும் ரத்து எனவும் வானிலை சீரான பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் சென்னை விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது

Related Posts