டாட்டா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய லோகோ வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்டுள்ள புதிய லோகோ மற்றும் புதிய ஏர் பஸ் விமான வெளிப்புறத் தோற்றம் பார்ப்பவர்களை மட்டுமல்லாமல் விமான பயணிகளையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து குறிப்பாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பல்வேறு பயணிகள் சிங்கப்பூர் செல்கின்றனர். டிசம்பர் 2023 முதல் ஏர் பஸ் ஏ350 விமானத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .

ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஏர்பஸ் ஏ 350 விமானத்தில் புதிய லோகோ மற்றும் புதிய விமானத்தின் வெளிப்புறத் தோற்றத்தை பயணிகள் காணலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இனி வரும் காலங்களில் ஏர் இந்தியாவின் விமான சேவை உலக தரத்தில் இருக்கும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.